முக்கிய பொருளாதார மையமாக மாறிவரும் இலங்கை!

முக்கிய பொருளாதார மையமாக மாறிவரும் இலங்கை!

இலங்கை மீண்டும் பிராந்தியத்தில் ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாறி வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தால் அந்த செயற்பாடு துரித கதியில் இடம்பெறும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் வர்த்தக நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் முக்கிய பொருளாதார மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.