சட்டவிரோத தொழில் நடவடிக்கையில்  ஈடுபட்ட இருவர் கைது!

சட்டவிரோத தொழில் நடவடிக்கையில்  ஈடுபட்ட இருவர் கைது!

வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், பருத்தித்துறை கடற்படையினர் வடமராட்சி கிழக்கு மணல் காடு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைதாகினர்.

கைது செய்யப்பட்டவர்கள் குடத்தனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.