வழக்குப் பொருள் தங்க ஆபரணத்தை அடகு வைத்த பொலிஸ் அதிகாரி கைது!

மிரிஹான பொலிஸ் நிலையத்தின் வழக்குப் பொருள் களஞ்சியசாலையில் இருந்த தங்க ஆபரணத்தை உரியவரிடம் கையளிக்காமல், அடகு வைக்கும் நிறுவனத்தில் அடகு வைத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்குப் பொருள் தங்க ஆபரணத்தை அடகு வைத்த  பொலிஸ் அதிகாரி கைது!

மிரிஹான பொலிஸ் நிலையத்தின் வழக்குப் பொருள் களஞ்சியசாலையில் இருந்த தங்க ஆபரணத்தை உரியவரிடம் கையளிக்காமல், அடகு வைக்கும் நிறுவனத்தில் அடகு வைத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த அதிகாரி மிரிஹான பொலிஸ் நிலையத்தின் வழக்கு பொருள் களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ளார்.

இதன்போது, அந்த களஞ்சியசாலையில், முறைப்பாட்டாளர் ஒருவருக்கு சொந்தமான தங்கத்தை வழங்குமாறு நீதிமன்றினால் அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அந்த பொலிஸ் அதிகாரி அந்த தங்கத்தை உரியவரிடம் கையளிக்காமல் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சந்தேகநபரான குறித்த காவல்துறை அதிகாரி தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, அவர், ஹக்மீமன பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.