சீதுவயில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது - பொலிஸார்!

சீதுவ - கிரிந்திகொட பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ - கிரிந்திகொட பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மாரவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவரென தெரியவந்துள்ளது.

கிரிந்திகொட- தடுகங் ஓயாவை அண்டிய பகுதியில் பயணப் பையிலிருந்த குறித்த சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சடலம் அடையாளம் காணப்படாமையினால் விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது.

அதன்படி, உயிரிழந்தவரின் தாயினால் சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.