நுவரெலியா மாநகர முன்னாள் முதல்வர் வீட்டில் குண்டு தாக்குதல்: சந்தேகநபர்கள் விடுதலை!

நுவரெலியா மாநகர முன்னாள் முதல்வர் நளின் திலக்கா ஹேரத்தின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை, நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யுமாறு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியா மாநகர முன்னாள் முதல்வர் வீட்டில் குண்டு தாக்குதல்: சந்தேகநபர்கள் விடுதலை!

நுவரெலியா மாநகர முன்னாள் முதல்வர் நளின் திலக்கா ஹேரத்தின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை, நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யுமாறு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த கைக்குண்டுத் தாக்குதல் 27 ஆண்டுகளுக்கு முன்பு, 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நடத்தப்பட்டது.

குறித்த வழக்கில் இன்று (26) தீர்ப்பு வழங்கிய நுவரெலியா மேல்நீதிமன்ற நீதிபதி, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசத் தரப்பு தவறியுள்ளதாக தெரிவித்தார்.