சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளியான ஆசிரியருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை! 

சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளியான ஆசிரியருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை! 

சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்றில் குற்றவாளியான தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா மேல்நீதிமன்றத்தால் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் க்லென்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராக சேவையாற்றிய ஒருவர் ஐந்தாம் தரத்தில் கல்வி பயின்ற சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.