பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!

பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!

மேல், தென், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (02) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரக் கூடிய 'எச்சரிக்கை' மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சில இடங்களில்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.