பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு வந்த சோதனை!

பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு வந்த சோதனை!

பிரான்ஸ் கால்பந்து வீரரான பவுல் பொக்பா (Paul Pogba) விற்கு 4 ஆண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக அவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கால்பந்து தொடரொன்றின் போது நடத்தப்பட்ட சோதனையில் பவுல் பொக்பாவின் (Paul Pogba) உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டிறியப்பட்டது.

எனினும் அவர் குறித்த போட்டியில் விளையாடவில்லை.

இந்தநிலையில் அவருக்கு இவ்வாறு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பவுல் பொக்பா (Paul Pogba) இந்த குற்றச்சாட்டு மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.