ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தமானி அறிவிப்பை வெளியிடத் தயாராக இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்ததோடு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கச் செய்தியாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

இது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவிடம் வினவியபோது, அதற்கான அறிவிப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு இன்று (25) காலை கூடவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான கைரேகை மை, எழுதுபொருட்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.