திலகரத்ன டில்ஷானும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் சிறிது காலம் அதன் தலைவராகவும் கடமையாற்றினார்.