மஹியங்கனை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மஹியங்கனை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மஹியங்கனை - பிபிலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். 

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒன்பது பேர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேருந்தொன்றும், சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.