பேருந்து கட்டணம் அதிகரிப்பு? - ரயில் கட்டணம் எப்போது?

புதிய வற் வரி திருத்தம் காரணமாக எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டாலும், பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரிப்பு? - ரயில் கட்டணம் எப்போது?

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று(1) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்த போதும், ரயில் கட்டணங்களில் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக ரயில் சேவையை முன்னெடுத்து செல்வதற்கு கடினமாக இருப்பதன் காரணமாக கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி விரைவில் குறுந்தூரம் மற்றும் தூர சேவை ரயில் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அறிய கிடைத்துள்ளது.