ஹபரனையில் குழு மோதல்: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!

ஹபரனை - பலுகஸ்வௌ பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில்இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்

ஹபரனை - பலுகஸ்வௌ பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில்இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் பணியுரியும் இரண்டு நபர்களுக்கிடையிலேயே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வேலைத் தளத்தில் இலங்கை மற்றும் சீனப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு தொழிலாளர்களுக்கு இடையில் இருந்த தனிப்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.