15 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு வீடுகள் பறிமுதல்! 

 15 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு வீடுகள் பறிமுதல்! 

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான இரண்டு வீடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

கிரிபத்கொட மற்றும் வத்தளை பிரதேசத்தில் உள்ள நாட்டின் முன்னணி போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமானது என கூறப்படும் இரண்டு வீடுகளே இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கடவத்தை - கரகஹமுன பிரதேசத்தில் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியில் கட்டப்பட்ட மூன்று மாடி சொகுசு வீடு ஒன்றும் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டின், உரிமையாளர் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.