கண்டியில் 2 மரங்கள் முறிந்து வீழ்ந்து இருவர் படுகாயம் - வாகனங்கள் சேதம்!

கண்டி – திலக்ரத்நாயக்க வீதியில் நின்ற இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் 2 மரங்கள் முறிந்து வீழ்ந்து இருவர் படுகாயம் - வாகனங்கள் சேதம்!

அத்துடன்,  கார், வேன், முச்சக்கரவண்டிகள் லொறி உட்பட 8 வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரும், இராணுவத்தினரும், கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படையினரும் இணைந்து மரங்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்தனர்.

கன மழை காரணமாக அரச மரமொன்றும், தேக்கு மரமொன்றும் முறிந்து வீழ்ந்ததில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது.