சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுராதபுரம் - கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.