நாட்டில் இன்று பலத்த மழை!

நாட்டில் இன்று பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (30) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், தென், சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இன்று (30) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.