வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் 2024 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள் சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.