போலி முத்திரைகளை பயன்படுத்தினால் விற்பனை இரத்து செய்யப்படும்!

மதுபான போத்தல்களில் போலி முத்திரைகளை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் உடனடியாக இரத்து செய்யப்படும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலி முத்திரைகளை பயன்படுத்தினால் விற்பனை இரத்து செய்யப்படும்!

குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி தமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மதுவரித்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்தும் பதிவாகி வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட மதுவரித்திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் மீது மாலபே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்களில் காயமடைந்த ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.