படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 19வது ஆண்டு நினைவு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் இன்று மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

மாமனிதர் டி.சிவராமின் 19வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி மலர அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நினைவு பேருரைகளும் இங்கு இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இன்றைய இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கலந்து கொண்டனர்.