காசா எல்லைப்பகுதியில் பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் இயக்கத்தினரால் பணயக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட தமது நாட்டவர்களை விடுவிக்கும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசா எல்லைப்பகுதியில் பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் இயக்கத்தினரால் பணயக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட தமது நாட்டவர்களை விடுவிக்கும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் காசாவில் மின்சாரம் துண்டிப்படைந்துள்ளது.

ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காசா பகுதியிலுள்ள ஹமாஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரையில் 1,300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்தநிலையில், ஹமாஸ் தரப்பினர் 150 இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள சுமார் 25 அமெரிக்க பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.