70 அடி பள்ளத்தில் விழுந்த லொறி - மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

கஹவத்தை ஹுனுவல அல்லின்ன பொல்வத்தஹேன பிரதேசத்தில் 70 அடி பள்ளத்தில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

70 அடி பள்ளத்தில் விழுந்த லொறி - மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

குறித்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 கோழிகளுக்கு உணவு ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.