கொழும்பிலிருந்து போதைப்பொருளுடன் யாழ் வந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து போதைப்பொருளுடன் யாழ் வந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 33 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

கொழும்பு - பாலத்துறை (தொட்டலங்க) பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.