அதிக பெறுமதியுடைய ஹெரோயுடன்  கைதான முகாமையாளருக்கு  விளக்கமறியலில்!

அதிக பெறுமதியுடைய ஹெரோயுடன்  கைதான முகாமையாளருக்கு  விளக்கமறியலில்!

அநுராதப்புரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனமொன்றின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் தமது உந்துருளி மூலம் போதைப்பொருளை கடத்திச்சென்ற போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.