ஐரோப்பிய வேலைவாய்ப்புக்கு இலங்கையர்களை அனுப்பும் முகவர் கைது

ஐரோப்பிய வேலைவாய்ப்புக்கு இலங்கையர்களை அனுப்பும் முகவர் கைது

வெளிநாடுகளில் தொழில் வாயப்பினை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் முந்தல் காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

ருமேனியாவில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

24 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவரே நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை முந்தல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.