மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் நிராகரிப்பு!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் நிராகரிப்பு!

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட 7 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த காரணிகளுக்கு ஏற்ப, இந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதவான், அந்த மனுக்களை நிராகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.