வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

இந்தியாவின் - திருப்பதி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் திருப்பதியில் இருந்து சென்னை சென்றுள்ளனர்.

நிகழ்வு முடிவடைந்து அவர்கள் மாலையில் திருப்பதி நோக்கி பயணமாகியுள்ளனர். 

இதன்போது, குறித்த குடும்பத்தினர் பயணித்த கார், பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 சம்பவத்தில் விபத்தில் சிக்கிய 5 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.