111 பேரின் உயிரை பறித்த நில அதிர்வு - 220 பேர் காயம்!

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வினால் 111 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

111 பேரின் உயிரை பறித்த நில அதிர்வு -  220 பேர் காயம்!

அத்துடன், இந்த அனர்த்தத்தில், 220க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இதனால் சீனாவின் கன்சு மற்றும் அதன் அண்டை மாகாணமான கிங்காய் ஆகியனவற்றில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் சிட்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் 60 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.