முன்னாள் போராளி சாவடைந்துள்ளார்

முன்னாள் போராளி சாவடைந்துள்ளார்

வணக்கம்,

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கைக்கு அமைவாக 2009 இறுதிக்களம் வரை பயணித்து விழுப்புண்களை தாங்கியவன்.

சிங்கள சிறைகளில்,தடுப்பு முகாம்களில் சித்திரவதைகளை சந்தித்து இயல்பு வாழ்கையில் பல நெருக்கடிகளை சந்தித்து வந்த ஆளுமை மிக்க போராளி யாழ்மைந்தன் தாயக மண்ணில் விதையாக வீழ்ந்து போனான்.

தான் கொண்ட கொள்கைக்காக பொதுவாழ்விலும் வாழ்ந்து காட்டியவன். நான் யாருக்கும் பின்னால் போகப்போவதில்லை. காலம் வரும்போது கூப்பிடுங்கள் அண்ணா என்றவன் .அவனது கடின உழைப்பும்,கம்பீரமான தோற்றமும் மறைந்தே போச்சு.

அவனுக்கு சோடியாக இரண்டு பெண் குழைந்தைகள் பிறந்த போது தமிழரசி,புகழரசி என பெயர் சூட்டி மகிழ்ந்தான். வீரவணக்கம் தம்பி

வதிவிடம் ..பாரதி வீதி தேவிபுரம் புதுக்குடியிருப்பு 

முல்லை

மு.பெயர்..சுப்பையா.   

                  சந்திரசேகரம்

இ.பெயர்..யாழ்மைந்தன்

படையணி.ராதாபடையணி

                    (விமானப்படை)

பி.ஆ.மா...............1971.09.11

இறப்பு..................2023.02.16

              அதிகாலை 05 மணி

 சசிக்குமார் மாஸ்டர் அவர் சகோதரியின் கணவராவார்