வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள்!

உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு அகிம்சை வழியில் உயிர்நீத்த திலீபனுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார் 

அதேநேரம், மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் அங்கு மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுச்சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மூதூர் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

சட்டத்தரணி தேவராஜா தவராஜசேகரம் ரமணன் தாக்கல் செய்திருந்த நகர்த்தல் பத்திரம் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இன்றைய வழக்கு விசாரணையின் போது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் மன்றில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.