விதி மீறலுக்காக வாகன ஓட்டுநர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை!  

போக்குவரத்து விதி மீறல்களுக்காக வாகன ஓட்டுநர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

விதி மீறலுக்காக வாகன ஓட்டுநர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை!  

போக்குவரத்து விதி மீறல்களுக்காக வாகன ஓட்டுநர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் அபாயகரமான அதிகரிப்பே இந்த முடிவுக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுநர்களின் உடல் மற்றும் மனத் தகுதியை பரிசோதிக்க நவீன தொழில்நுட்பத்தை அரசாங்கம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக லசந்த அழகியவன்ன கூறியுள்ளார்.