பாகிஸ்தான் மீது ஈரான் முதன்முறையாக ஏவுகணை தாக்குதல் - இரண்டு சிறுவர்கள் பலி!

தங்களது அண்டைய நாடான ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மீது ஈரான் முதன்முறையாக ஏவுகணை தாக்குதல் - இரண்டு சிறுவர்கள் பலி!

ஜெய்ஷ் அல் - அட்ல் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈராக் அறிவித்துள்ளது.

எனினும் இதனை நிராகரித்துள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலானது பாதகமான விளைவுகளுக்கு இட்டு செல்லும் சட்டவிரோத செயலாகும் என குறிப்பிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ள போதிலும், தங்களது எல்லை பகுதியான பலுசிஸ்தானின் தென்மேற்கில் உள்ள கிராமம் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பாகிஸ்தானின் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்துவது இதுவே முதன்முறையாகும்.