மக்களை நம்ப வைப்பதற்காக எனது பெயர்களிலும் புகைப்படத்துடனும் பல போலி முகநூல்கள்

1 / 1

1.

தாயக விடுதலைச் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போராளிகள் மீது பலவேறுவிதமான விசமத்தனமான பிரச்சாரங்கள் தொடர்ந்தும் எதிரியால் கட்டவிழ்த்துவிடப்பட்டே வருகிறது.

ஆயுத விடுதலைப்போராட்டம் உச்சம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவ துணைக்ககுழுவான ஈபிடிபி என அழைக்கப்படும் ஒட்டுக்குழு, இதயவீணை எனும் வானொலி ஊடாக எமது தேசியத்தலைவர்,தளபதிகள் மற்றும் தலைவரதும்,தளபதிகளதும்  

குடும்பம் தொடர்பாகவும்,விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மிகவும் கீழ்த்தரமான வசைபாடல்களையும், உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளையும் பரப்பிவந்ததை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்துவதற்காக எதிரி கையாண்ட பிரச்சார யுக்தியே இது. ஆனாலும் ‘விழிப்புதான் விடுதலைக்கு முதற்படி”எனும் எமது தேசியத்தலைவரின் தத்துவார்த்த கருத்துக்கேற்ப விழிப்படைந்த எமது மக்கள் இதயவீணை எனும் ஈபிடிபி இன் கோழைத்தனமான ஊதுகுழல் வானொலி மூலம் பரப்பப்பட்டுவந்த விசமத்தனமான பிரச்சாரங்களை முறியடித்திருந்தனர்.

2009 மே 18 ஆயுத மௌனப்பிற்கு பின்னர் தற்போது இதயவீணை போன்ற பாணியில் இ(து)ன்பத்தமிழ், தாயக விடியல்,களத்தின் குரல் போன்ற புதிய வகை பிரச்சாரப் பிணிகள் அதிகம் பீடிக்கத் தொடங்கியுள்ளன.

சமூக வலைத்தளங்கள்,முகநூல்கள், வட்சப் குழுமங்கள் என்பனவற்றின் அதிகரித்த தாக்கம் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் வேகமாக கடத்தப்பட்டுவிடுகின்றன. இதனைச் சாதகமாக்கி எதிரியானவன் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும்,விடுதலைச் செயற்பாடுகள் தொடர்பாகவும் உண்மைக்குப் புறம்பாக வதந்திகளைப் பரப்பி மக்களை குழப்பமடையச் செய்ய முயன்று வருகிறான்.

சமூக ஊடகங்கள் ஊடாக ஒரு பொய்யான செய்தி எந்தளவுக்கு 

மக்களைச் சென்றடைகிறதோ அந்தளவுக்கு அதன் உண்மைத் தன்மையை விரைவாக கண்டறியவும் அதே சமூக ஊடகங்களால் முடியும் என்பதனை எதிரி கணிக்கத் தவறிவிட்டான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதன் நியாயத்தன்மையை வலுவிழக்கச் செய்யவும், சர்வதேச நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளை நீடித்து எமது ‘தேசிய விடுதலைக்கான போராட்டத்தை’ பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்கும், விடுதலைப் புலிகளின் போராளிகள் பற்றிய மக்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணங்களை சிதைத்து மக்களின் மனங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவும்,மக்களை விடுதலைச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கச் செய்வதற்குமே எதிரி பல துரோகிகளை உருவாக்கி கூலிப்படையாக இப்பிரச்சார நடவடிக்கையை செய்து வருகிறான்.

சிலர் திட்டமிட்டே இந்தச் சூழ்ச்சிக்கு ஆணிவேராயிருந்தார்கள். பலர் திட்டமிட்டு நடாத்தப்பட்ட பிறழ்வுப் பரப்புரையால் இதற்குத் துணைபோயினர்.

எல்லா முயற்சிகளிலும் தோற்றுப்போனவர்கள் இறுதியில் எனது பெயரில் வட்சப் குழுமங்கள் திறந்து எனது புகைப்படத்தை அல்லது பெயரைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான பதிவுகளை பரப்பியபோது நாளடைவில் அவை தொடர்பில் மக்கள் விழிப்படைந்து போலிகள் இனங்காணப்பட்டு உண்மை வென்றது. இதனால் நிலைகுலைந்த தேசவிரோதிகள் 

இப்போது போலிமுகநூல்களில் வலம்வரத்தொடங்கியுள்ளனர்.

இதேவேளை போலி முகநூல்களுடன் மோதி முரண்பாட்டுக்குள் சிக்குப்படும் உறவுகளையும் நானறிவேன்.

தமது பொய் பித்தலாட்டங்களை மக்கள் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பதை நன்கறிந்த தேசவிரோதிகள் எனது புகைப்படம் மற்றும் பெயரிலும், எமது இயக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்ட அல்லது மக்களுக்கு நன்கறியப்பட்ட போராளிகளின் புகைப்படம் மற்றும் பெயர்களிலும், முகநூல்களை உருவாக்கி அதன்மூலம் தமது வதந்திகளைப் பரப்பிவிட படாதபாடுபட்டு வருகின்றார்கள்.

போலித் துவாரகா கும்பல் இதுவரை ஒரு போராளியை மக்களுக்கு முன்னால் நிறுத்த முடியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டே இந்த போலி முகநூல்கள்.

போராளிகளின் பெயர்களில்,அவர்களின் படங்களில் முகநூல்களை உருவாக்கி போலித் துவாராகா கும்பலில் போராளிகள் உள்ளதாக மக்களை நம்பவைப்பதற்குக்கூட அந்தப் பணமோசடிக் கும்பலுக்கு எமது போராளிகளின் பெயர்களும்,புகைப்படங்களுமே தேவைப்படுகிறது. 

ஒரு போலிப் பெண்ணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு முகநூல்களில் வீரவசனம் பேசும் இந்தக்கோழைகள் எப்படி ஒரு போராளியாக இருக்க முடியும்.

போலித் துவாரகாவுக்காக முகநூலில் உயிர்கொடுக்க ஒரு போலிப் போராளி கூடவா இல்லை????????????????

தலைவரின் மகள் துவாரகாவென போலியாக ஒரு பெண்ணை ஒட்டுக்குழு டக்ளசின் இதயவீணை போன்ற இ(து)ன்பத்தமிழ் வானொலியில் களமிறக்கிய கும்பலில் ஒரு போராளிகூடவா இல்லை..!

மக்கள் இதனை நம்புவதற்கு என்ன மந்தைக் கூட்டங்கள் என்றா நினைத்தது இந்தப் போலி பணமோசடிக் கும்பல்..!

விழிப்புடன் செயற்படுவோம்

போலிகளை நிராகரிப்போம்.

புலவர்.