நிரந்தர நியமனம் வேண்டும் - இல்லாவிட்டால் மாற்று வழிகளை கடைபிடிப்போம்!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் தற்காலிக பணியாளர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளனர்.

நிரந்தர நியமனம் வேண்டும் - இல்லாவிட்டால் மாற்று வழிகளை கடைபிடிப்போம்!

திருகோணமலை - கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக இன்று (18) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் தற்காலிக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அவ்வாறில்லையெனில் தாங்கள் மாற்று வழிகளை கையாள நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.