நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்தில் சிறுமி மீது பாலியல் தொந்தரவு!

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு ஒன்றுக்காக, கலகெதர நீதவான் நீதிமன்றுக்கு பிரசன்னமாகியிருந்த 12 வயதுடைய சிறுமி ஒருவருக்கு நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்தில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்தில் சிறுமி மீது பாலியல் தொந்தரவு!

தமது, தாயுடன் குறித்த சிறுமி நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து வழக்கு அழைப்புக்காக காத்திருந்தார்.

குறித்த சந்தரப்பத்தில், அந்த சிறுமிக்கு நபர் ஒருவர் பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இதனையடுத்து, குறித்த சிறுமியின் தாய், நீதிமன்றத்தின் நன்னடத்தை அதிகாரிகளிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, 58 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.