ஜனாதிபதி வேட்பாளருக்கு மனைவிகளால் அச்சுறுத்தல் - ​மேலதிக பாதுகாப்பு கோருகிறார்!

ஜனாதிபதி வேட்பாளருக்கு மனைவிகளால் அச்சுறுத்தல் - ​மேலதிக பாதுகாப்பு கோருகிறார்!

ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போது அவர்களில் ஒருவர் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளார். 

குறித்த ஜனாதிபதி வேட்பாளர் அதிக பாதுகாப்பை கோரியுள்ள நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என ஆராயப்பட்டது.

இதன்போது, அவரது திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் உள்ளமையே அவருக்கு பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதே தவிர வேறு எந்த பிரச்சினையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பையும், திலித் ஜயவீரவுக்கு அதிக பாதுகாப்பையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என பரிசீலிக்கும் போது, ​​பெண்கள் சார்ந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட வேட்பாளர் மட்டுமே, சிறப்பு பாதுகாப்பு கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது. 

எவ்வாறாயினும், தேர்தல் சட்டங்களுக்கமைய, இவர்கள் ஒவ்வொருவருக்கும் விசேட பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானதல்ல என தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன.

இந்த 39 வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.