ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்!

கொட்டா வீதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்!


கொழும்பு 8 - பொரள்ளை - கொட்டா வீதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில சமயங்களில் விபத்துக்குள்ளான ரயில் சீரமைக்கப்படும் வரை அந்த மார்க்கத்தில் பயணிக்க வேண்டிய சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த அலுவலக ரயிலே தடம் புரண்டுள்ளது.

இதன்போது, இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.