இலங்கையில் முதலீடு செய்ய தயாராகும் ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டாளர்கள்!

ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் முதலீட்டாளர்கள் குழுவொன்று இலங்கையின் சில துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில்  முதலீடு செய்ய தயாராகும் ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டாளர்கள்!

இதன்படி, எரிசக்தி, சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் காணி விற்பனை சார்ந்த துறைகளில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு குறித்த முதலீட்டாளர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

 டுபாயில் நடைபெறும் கொப் 28 மாநாட்டில் கலந்துக்கொண்ட குறித்த குழுவினர், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சிய தூதரகம் குறித்த முதலீட்டாளர்கள் குழுவை நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.