வெல்லம்பிட்டியில் 5 பெண்களுடன் 43 சந்தேகநபர்கள் கைது!

வெல்லம்பிட்டி - சிங்கபுர பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 43 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டியில் 5 பெண்களுடன் 43 சந்தேகநபர்கள் கைது!

வெல்லம்பிட்டி - சிங்கபுர பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 43 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் 138 பொலிஸாரும் 200 இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெல்லம்பிடிய பகுதியில், 196 பேரும் 61 வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள், கையடக்க தொலைப்பேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.