அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக தகவல்!

அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக தகவல்!

பொதுச் சேவையை மேலும் வினைத்திறனாக்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் முதல் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரை இந்த நிலைமை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 589 அரச அதிகாரிகளின் மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 22% அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.