எரிவாயு விலை இன்று அதிகரிக்க வாய்ப்பு?

எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான முக்கிய அறிவிப்பை இன்று (04) லிட்ரோ நிறுவனம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை இன்று அதிகரிக்க வாய்ப்பு?

எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான முக்கிய அறிவிப்பை இன்று (04) லிட்ரோ நிறுவனம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வை கருத்தில் கொண்டு நாட்டில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பான விலைகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இதுவரை இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.