நாடளாவிய ரீதியில் 1,073 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் 1,073 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,073 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கைது செய்யப்பட்டவர்களில் 1,019 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குற்றப் பிரிவினருக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 54 சந்தேக நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது, ஹெரோயின் உள்ளிட்ட  போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.