115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி!

2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 115 மருந்துகள், தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி!

இதுவே ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள், தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த சந்தர்ப்பமாகும் என சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 58 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என குறிப்பிடப்படுகின்றது. 

45 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதுடன், ஏனையவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். 

 இந்தநிலையில் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில மீளப் பெறப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்திருந்தன. 

அந்த வருடத்தில் மாத்திரம் 96 வழக்குகள் பதிவாகியிருந்தன.