பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் வேதனம்?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் வேதனம்?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரத்து எழுநூறு ரூபாய் என்ற நாளாந்த வேதனம் போதாது எனவும் அது இரண்டாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஹல்துமுல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முறைமையும் தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.