கையூட்டல் பெற்ற 2 காவல்துறை அதிகாரிகள் கைது!

கையூட்டல் பெற்ற 2 காவல்துறை அதிகாரிகள் கைது!

போக்குவரத்து விதிமீறல் குற்றத்தை மறைப்பதற்காக கையூட்டல் பெற்ற களுத்துறை - இத்தேபான காவல்துறையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணியாது உந்துருளியில் பயணித்த ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தேபான காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த குற்றத்தை மறைப்பதற்கு 10 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக கோரிய நிலையில், அதனை காவல்நிலையத்தில் பெற்றுக்கொள்ள முற்பட்ட போது, குறித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.