தேர்தல் திணைக்களத்திற்கு 519 முறைப்பாடுகள்!

தேர்தல் திணைக்களத்திற்கு 519 முறைப்பாடுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைச் செயல்கள் தொடர்பாக 01 முறைப்பாடும், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது