யாழ்ப்பாணத்தில் 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர்  வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று  விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது படையினர் வசமுள்ள 3,412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் காங்கேசன்துறையில் 20.03 ஏக்கரும், தென்மயிலையில் 24.9 ஏக்கரும், அரியாலையில் 0.45 ஏக்கரும், வறுத்தளைவிளானில் 23.27 ஏக்கரும் அடங்குகின்றன.

அந்த நிலங்களுக்கான உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.