அசாதாரண காலநிலையால் 86 பேர் பலி - 151 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

அசாதாரண காலநிலையால் 86 பேர் பலி - 151 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அங்கு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சீரற்ற வானிலையினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.