தாய்லாந்தில் விமானம் ஒன்று விழுந்து 9 பேர் பலி!

தாய்லாந்தில் விமானம் ஒன்று விழுந்து 9 பேர் பலி!

தாய்லாந்து தலைநகர் பெங்கொக் அருகே சதுப்பு நிலப்பகுதியில் சிறு ரகபயணிகள் விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில், அதில் பயணத்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பெங்கொக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்திலிருந்து டிராட் மாகாணத்துக்கு பயணித்த "தாய்" விமான சேவை என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள், 2 விமானிகள் உட்பட தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேர் இருந்துள்ளனர்.

குறித்த விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நேர்ந்த இடத்தில் தாய்லாந்து பொலிஸாரும், தடயவியல் நிபுணர்களும், மீட்புக் குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.