கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் பலி!

கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் பலி!

புத்தளம் - மதுரங்குளி பகுதியில் சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது குறித்த சிறுமி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மதுரங்குளி பகுதியை சேர்ந்த 06 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.